ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார், பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 104 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை ஜனவரி 26ம் தேதி அறிவித்தது மத்திய அரசு. இதற்கான விழா, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது. பாலிவுட்டின் மெகா ஸ்டார்களான அமிதாப் பச்சன் மற்றும் திலீப் குமார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி.
இதேப்போல் பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் ஜானு பருவா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும், நடிகர் கோட்டா சீனிவாச ராவ், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.